தலக்குளம், செப். 01 –
தலக்குளம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (35). இன்னும் திருமணம் ஆகவில்லை. அந்த பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சர்வர் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் காய்ந்த விறகுகளை அடுக்கும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர் இடுப்பு பகுதியில் ஏதோ விஷப்பூச்சி கடித்ததில், வலியால் அலறினார். உடனே அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்து விட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிட்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர அளித்தும் பலன் இன்றி நேற்று இரவு ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது சகோதரர் சுரேஷ் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


