தருமபுரி, ஆகஸ்ட் 28 –
தருமபுரி மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக தருமபுரி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட விளையாட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி ஆகியோர் போட்டிகளை துவங்கி
வைத்தனர். தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு இணையாக நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 37 விளையாட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகள் 26/8/2025 முதல் வரும் 12/9/2025 வரை நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, நகர மன்ற தலைவர் லட்சுமி மாது, மாவட்ட அமெச்சூர் கபடி சங்கத் தலைவர் பாஸ்கர், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சண்முகம், பென்னாகரம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் பச்சையப்பன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கௌதம், துணை ஒருங்கிணைப்பாளர் உதயசூரியன், தொகுதி ஒருங்கிணைப்பாளர் ரகு, நகர ஒருங்கிணைப்பாளர் முருகவேல், தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வினோத்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.



