தஞ்சாவூர் மே 8
தஞ்சாவூர் மாவட்டத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வில் 93.46 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் மாவட்டத்தில் 227 பள்ளிகளைச் சேர்ந்த 25734 மாணவ மாணவி யர்கள் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதினர் இவர்களில் 24 ஆயிரத்து 52 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர் தேர்ச்சி விகிதம் 93.46 சதவீதம் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 11,819 மாணவர்களில் 10,710 பேரும் 13,915 மாணவியர்களின் 13,342 பேரும் தேர்ச்சி பெற்றனர் அதாவது மாணவர்களில் 93.62 சதவீதம் பேரும் மாணவிகளின் 95.88 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்தனர் மாவட்டத்தில் கடந்த 20 23ஆம் ஆண்டு 95.18 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில், நிகழாண்டில் தேர்ச்சி விகிதம் 1.72 சதவீதம் குறைந்துவிட்டது. மாநில அளவிலான சராசரி தேர்ச்சி விகிதம் 94.56 சதவீதம் உள்ள நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அதையும் விட 1.10% குறைந்து ள்ளது. மேலும் மாநில அளவிலான தேர்ச்சி விகித தரவரிசை பட்டிய லில் கடந்தாண்டு 16 இடத்திலிருந் தநிலையில், நிகழாண்டில் 26வது இடத்திற்கு சறுக்கியது மாவட்டத்தில் 54 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 8 அரசு பள்ளிகளின் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன நூறு சதவீதம் தேர்ச்சியும் கடந்த ஆண்டு 16 அரசு பள்ளிகள் உள்பட மொத்தம் 68 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்ற நிலையில் நிகழாண்டில் 54 பள்ளிகள் குறைந்து உள்ளது மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. மாவட்டத்தில் சராசரி தேர்ச்சி விதம் 93.46 சதவீதம் உள்ள நிலையில், அரசு பள்ளிக ளில் 89.98 சதவீதமாக உள்ளது. மாவட்ட சராசரி விகிதத்தை விட அரசு பள்ளிகளில் 3.48 சதவீதம் குறைவு இதைப்போல ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் 51 மாணவி மாணவி யர்களில் 45 பேர் தேர்ச்சி பெற்று 88.24 சதவீத விகிதத்தையும், மாநகராட்சி பள்ளி 53 பேர் தேர்வு எழுதியதில் 46 பேர் தேர்ச்சி பெற்று 86.69 சதவீத தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளனர் சுயநிதி மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 98.50 சதவீத பேரும் மாநில அரசின் பள்ளி கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுயநிதி பள்ளிகளில் 98.41 சதவீத பேரும் அரசு பகுதி உதவி பெறும் பள்ளிகளில் 97.29 சதவீதம் பெரும் சமூக நலத்துறை சார்ந்த பள்ளிகளில் 93.75 சதவீத பேரும் அரசு முழு உதவி பெறும் பள்ளிகளில் 91.02 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.