தஞ்சாவூர், மே 11 –
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 206 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்கள்.
இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயணி, சமூக பாதுகாப்பு திட்டதனி துணை ஆட்சியர் சௌமியா, உதவிய ஆணையர் (கலால்) ரேணுகாதேவி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



