தஞ்சாவூர், ஜூன் 9 –
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 550 மனுக்கள் அளித்தனர். மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அதன் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், உதவி கலெக்டர் (பயிற்சி) கார்த்திக் ராஜா, சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியர் மணிமாறன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஸ்ரீதர், மாவட்ட வழங்கல் அலுவலர் கமலக்கண்ணன், மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.