தஞ்சாவூர், செப்டம்பர் 18 –
தஞ்சாவூரில் பெரியாரின் பிறந்த நாளை ஒட்டி திமுகவினர் சமூக நீதி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். திமுகவினர் சமூக நீதி உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடை பெற்றது.தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் தஞ்சாவூரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலர் சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமை தாங்கினார் .திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எஸ் எஸ் பழனி மாணிக்கம், டி.கே.ஜி. நீலமேகம் எம்எல்ஏ, மேயர் சண் ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட அவை தலைவர் இறைவன், பொருளாளர் எல்.ஜி. அண்ணா, செயற்குழு உறுப்பினர்கள் து. செல்வம், பகுதி செயலாளர்கள் மேத்தா, கார்த்திகேயன், நீலகண்டன், ஒன்றிய செயலாளர்கள் அருளானந்த சாமி, செல்வகுமார் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து அனைவரும் சமூக நீதி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உறுதி மொழியை மாவட்ட செயலர் துரை. சந்திர சேகரன் எம்எல்ஏ வாசிக்க திமுக நிர்வாகிகள் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.



