தக்கலை, ஜூன் 7 –
தக்கலை அருகே உள்ள விலவூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் சஜின் (30). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று இரவில் சாப்பிட்ட பின் சஜின் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இந்த சூழலில் அருகே உள்ள தென்னந்தோப்பில் சஜின் தூக்கில் பிணமாகத் தொங்குவதாக உறவினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. விரைந்து சென்று அவரை மீட்டுத் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் சஜின் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து தங்கராஜ் புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.