களியக்காவிளை, செப். 5 –
செங்கல் சிவபார்வதி கோயிலில் ஒனவிழா கொண்டாடப்பட்டது. களியக்காவிளை அருகே செங்கல் சிவ பார்வதி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவோண விழா கொண்டாடுவது வழக்கம். இந்த விழா இவ்வாண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோயிலில் வழக்கமான பூஜைகள், நடந்தது. தொடர்ந்து கோயில் மண்டபத்தில் திருவோணத்திற்கு தேவையான காய்கறி வகைகள், பழங்கள் உள்ளிட்டவைகள் வரிசையாக வைக்கப்பட்டது.
சிவன், பார்வதி அருளாசி வழங்கிய காய், கனி வகைகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோயில் தலைமை அர்ச்சகர் குமார் தலைமை வகித்தார். சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி சிறப்பு பூஜைகள் செய்தார். இதில் கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



