கிருஷ்ணகிரி, ஆக.24.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து நாள் தோறும் அஞ்செட்டி, டேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு நாள்தோறும் ஏராளமான விவசாயிகள் கூலி வேலைக்கு செல்கின்றனர்
இவர்கள் சென்று வர போருந்து வசதி இல்லாதால் சூளகிரியில் இருந்து ஓசூர் சென்று அங்கு இருந்து அஞ்செட்டி பகுதிக்கு வேறு பேருந்தில் செல்ல வேண்டிய நிலை இருப்பதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்,
ஆகையால் சூளகிரியில் இருந்து நாயக் கோட்டை, கொலமங்கலம், டேன்கனிக்கோட்டை வழியாக அஞ்செட்டிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி எஸ் ,டி, துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது
ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கதால் மீண்டும் நினைவூட்டும் வகையில் காங்கிரஸ் கட்சியின் எஸ்,சி,எஸ்,டி துறை மாநில செயலாளர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமாரிடம் கோரிக்கை மனுவினைக்கொடுத்தார்,
மேலும் அந்த மனுவில் சூளகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் கூலி வேலை தேடி உரிகம், அஞ்செட்டி
உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று வருகின்றனர்
ஆனால் இவர்கள் சென்று வர போதிய பேருந்து வசதியில்லாததால் ஓசூரில் இருந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது இதனால் அவர்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது ஆகையால்
சூளகிரியில் இருந்து ராயக்கோட்டை வழியாக அஞ்செட்டிக்கு புதிய வழித்தட பேருந்து ஏற்ப்படுத்தி இப்பகுதி
மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.



