அனுப்பர்பாளையம், ஆக. 15 –
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியானது. இதையொட்டி சூப்பர் ஸ்டார் மக்கள் கழகம் மற்றும் சூப்பர் ஸ்டார்ஸ் மகளிர் சேவை மையம் சார்பில் திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் உள்ள தியேட்டரில் பெண் தொழிலாளர்கள் மட்டும் திரைப்படத்தை இலவசமாக பார்க்கும் வகையில் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதேபோல் அவினாசி ரோடு எஸ்.ஏ.பி சந்திப்பில் உள்ள மற்றொரு தியேட்டரில் ஆண் தொழிலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரைப்படத்தை இலவசமாக பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்த தியேட்டர்களிலும் சிறப்பு காட்சிக்கு முன்பாக 1400 தொழிலாளர்களுக்கு அதற்கான டிக்கெட் மற்றும் இனிப்புடன் கூடிய காலை உணவை சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகத்தின் பொதுச்செயலாளர் எஸ்.எஸ். முருகேசனிடம் அதைப் பெற்றுக் கொண்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் சென்று கூலி திரைப்படத்தினை பார்த்தனர்.
இதேபோல் கூலி திரைப்படம் வெற்றி பெற வேண்டி பல்வேறு இடங்களில் 7 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக பெண் தொழிலாளர்கள் எஸ்.எஸ். முருகேஷ்க்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு வழங்கியதுடன் தியேட்டர்கள் முன்பும் செண்டை மேளம் முழங்க பட்டாசுவெடித்து கட்சி நிர்வாகிகள் ஆரவாரம் செய்தனர்.
10 வயதில் இருந்து தீவிர ரஜினிகாந்த் ரசிகராக இருந்து அவருடைய ஒவ்வொரு திரைப்படமும் வெற்றி பெற வேண்டி ரத ஊர்வலம், 5 ஆயிரம் பால்குட ஊர்வலம் என பல்வேறு நிகழ்ச்சிகளை ஏந்த எதிர்பார்ப்பும் இன்றி தொடர்ந்து செய்து வருகிறோம் என்றும் சரியான நேரத்தில் சரியான முடியை ரஜினிகாந்த் எடுப்பார் என்றும் எஸ்.எஸ். முருகேஷ் தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகத்தின் நிர்வாகிகள் செந்தில்,
ஆத்தி முத்து, பாது, அமர்நாத், பாலசுப்பிரமணி, கரேஷ், ராஜா, கிருஷ்ணன், ஆனந்த்-சூப்பர் ஸ்டார்ஸ் மகளிர் சேவை மைய நிர்வாகிகள் தமிழாசி, கண்ணம்மாள், ராஜேஸ்வரி, பால ரேவதி, மரகதம், சுலோச்சனா மற்றும் நிர்வாகி பொறுப்பாளர்கள்
ரசிகர்களுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.



