மார்த்தாண்டம், ஆக. 27 –
குலசேகரம் அருகே சுருளகோட்டில் தனியார் ரப்பர் பால் நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக ஊதிய உயர்வு மற்றும் சலுகைகள் மறுக்கப்பட்டு வருவதை தொடர்ந்து கடந்த 43 நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. இது தொடர்பாக தொழிலாளர் துறை பேச்சு வார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை.
இந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை தொடர் சத்தியாகிரப் போராட்டத்திற்கு திருநெல்வேலி எம்பி ராபர்ட் புருஸ் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதிகாரிகளிடம் முறையிடுவதாக உறுதி அளித்தார்.



