சுசீந்திரம், ஜன. 30 –
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் அருகே வடக்கு பகுதியில் உள்ள தெப்பக்குளம் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்தது. இந்த தெப்பகுள சுற்றுச்சுவர் திடீரென வடக்கு பகுதியில் உள்ள தடுப்பு சுவர் சரிந்து விழுந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மணல் மூடைகள் அடுக்கி தற்காலிக தடுப்பு சுவரை கட்டினர்.
இந்நிலையில் சுசீந்திரம் ஆசிரமம் பகுதியைச் சார்ந்த கார்த்திக் கண்ணன் என்பவர் கடந்த 10.12.2025 அன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்து இருந்தார். அந்த வழக்கில் தெப்ப திருவிழா வருவதால் உடனடியாக தெப்பக்குளத்தை சுற்றியுள்ள தடுப்பு சுவரை கட்டி முடிக்க வேண்டும் என வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில் வழக்கு நடைபெற்று வந்தது.
இன்று மதுரை உயர்நீதிமன்ற நீதி அரசர் சுசீந்திரம் தெப்பக்குளம் தடுப்புச் சுவரை தெப்பத் திருவிழாவிற்கு முன்பு கட்டி முடிக்க வேண்டும் என உத்தரவு பிரபித்து வழக்கை முடித்து வைத்தார். இந்நிலையில் தெப்பக்குளம் தடுப்பு சுவரை கட்டுவதற்காக தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ஒரு கோடியே 43 லட்சம் ரூபாய் டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த டெண்டருக்கான நகலை சென்னை ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது சென்னை ஆணையர் உத்தரவு தெரிபித்த உடன் அதற்கான வேலை நடைபெறும் என சம்மந்தப்பட்ட அதிகாரி தெரிவித்தார்


