வேலூர், ஆகஸ்ட் 22 –
வேலூரில் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதிய வாக்கு பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குபதிவு ஒப்புகை இயந்திரங்கள் பெங்களூரிலிருந்து கொண்டு வரப்பட்டது. இதனை தேர்தல் ஆணையத்தின் முதன்மை கூடுதல் செயலாளர் ஸ்ரீதர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அணைத்து கட்சியினர் முன்னிலையில் இறக்கப்பட்டது.
வேலூரில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 1200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குசாவடி என்ற அடிப்படையில் அதிக வாக்குபதிவு இயந்திரங்களும் வாக்கு ஒப்புகை சீட்டு இயந்திரங்களும் (விவிபாட்) பெங்களூர் பெல் நிறுவனத்திலிருந்து புதியதாக கொண்டு வரப்பட்டது. இதனை முன்னிட்டு வேலூர் வாக்குபதிவு மையத்தில் உள்ள வாக்குபதிவு கிடங்கில் அனைத்து கட்சியினர் முன்னிலையில் கிடங்கு சீல் திறக்கப்பட்டு கொண்டு வரப்பட்ட 600 கன்ட்ரோல் யூனிட் மற்றும் 100 விவிபேட் எனப்படும் வாக்குபதிவு ஒப்புகை இயந்திரங்கள் இறக்கி வைக்கப்பட்டது.



