கோவை, செப். 24 –
கோவை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட மணியக்காரம்பாளையம் 18, 19, 30 ஆகிய வார்டுகளில் கிருஷ்ண கவுண்டர் தனியார் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு சிறப்பு விருந்தினராக மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமசந்திரன் கலந்து கொண்டனர்.
இம்முகாமானது 14 துறைகளில் மூலம் 43 சேவைகளை கொண்டு நடைபெற்றது. இதில் சில மனுக்களுக்கு உடனடி தீர்வு தரப்பட்டது. இதில் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், 18வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், 19வது மாமன்ற உறுப்பினர் கல்பனா ஆனந்தகுமார், 30வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரண்யா செந்தில்குமார் மற்றும் உதவி வருவாய் அலுவலர் அஸ்கர்பாஷா, மின்சாரத்துறை இ அர்பன் மெட்ரோ பசுபதீஸ்வரன் மற்றும் அனைத்துதுறை அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமனோர் கலந்து கொண்டனர்.



