கோவை, ஆகஸ்ட் 16 –
கோவை மாவட்டம் கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு ராமலிங்கம் சாலையில் ஸ்ரீ தர்மசாஸ்தா பூஜா சங்கம் சார்பாக ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி மண்டபத்தில் கோவை ஞானானந்த மண்டலி நடத்தும் ராதா கல்யாண மஹோத்சவம் பூஜை நடைபெற்றது.
காலையில் உஞ்ச விருத்தி, அதனைத் தொடர்ந்து ராதா கல்யாண மஹோத்சஸவம், திருக்கல்யாண சிறப்பு விருந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நல்லறம் அறக்கட்டளை மற்றும் அம்மா ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவன தலைவருமான எஸ்.பி. அன்பரசன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்தார். மேலும் இச்சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அறுசுவை உணவாக அன்னதானம் மிக பிரம்மாண்டமாக வழங்கப்பட்டது.



