தென்தாமரைகுளம், அக். 27 –
அகஸ்தீஸ்வரம் ஒன்றிய விசுவ ஹிந்து பரிசத் சார்பில் வெங்கல ராஜன் கோட்டை பாற்கடல் பதம் எடுத்து கோவில்விளை பகவதி அம்மன் கோவிலில் இருந்து வேல் எடுத்து ஊர்வலமாக நடந்து சென்று விஜயநகரி மலை முருகன் கோவில் கொடுக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.
கோவில்விளை பகவதி அம்மன் கோவிலில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்ட ஊர்வலம் முகிலன்குடியிருப்பு, பூவியூர், தென் தாமரை குளம், குமாரப்பெருமாள்விளை, தேரி விளை வழியாக நடந்து சென்று விஜயநகரியில் மலையில் அமைந்துள்ள மலைமுருகன் கோவிலுக்கு சென்று நிர்வாகி முத்துகிருஷ்ணனிடம் வேலை கொடுத்தனர் அங்கு வேலுக்கு பூஜை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய விசுவ இந்து பரிசத் துணைத் தலைவர் எஸ்.கே. குமார் தலைமை தாங்கினார். தென் தாமரை குளம் பேரூராட்சி 12 வது வார்டு கவுன்சிலர் திருமதி பாய் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கோவில் விளை ஊர்த் தலைவர் ராஜகுமார், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணைச்செயலாளர் காளியப்பன், பாரதிய கிசான் சங்க மாநில செயலாளர் முருகன், வெங்கலராஜன் அறக்கட்டளை தலைவர் நீல மதுமயன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய விசுவ இந்து பரிசத் தலைவர் மோகன், மாநகரத் தலைவர் நாஞ்சில் ராஜா, மாநகர பொதுச்செயலாளர் மணிகண்டன், திருக்கோவில் திருமட அமைப்பாளர் அமர்நாத் சிவக்குமார், அகஸ்தீஸ்வரம் பேரூர் தலைவர் சுபாஷ், சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.



