ஈரோடு, ஜூலை 13 –
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 25ந் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அலுவலர்களுக்கான கூட்டம் பெருந்துறையில் நடந்தது. இதில் அமைச்சர்கள் கே ஏ செங்கோட்டையன் மற்றும் விஜய் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சிதலைவர் கந்தசாமி ஈரோடு மேற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த் மோகன், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் முத்துசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



