மார்த்தாண்டம், ஜூன் 23 –
மஞ்சாலுமூடு பகுதியைச் சேர்ந்த 2 குழந்தைகளின் தாயான இளம் பெண் ஒருவரும் அதே பகுதியைச் சேர்ந்த 36 வயது வாலிபர் ஒருவரும் பிளஸ் டூ வரை ஒன்றாக படித்த நண்பர்கள். அந்தப் பெண் கடந்த ஏப்ரல் மாதம் 12-ம் தேதி உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு குழித்துறையில் பஸ்சுக்காக நின்றார். அப்போது அந்த வாலிபர் காரில் வந்து வீட்டில் கொண்டு சென்று விடுவதாக அழைத்துச் சென்றுள்ளார். மிக பழக்கமுள்ள நபர் என்பதால் இளம்பெண் அவருடன் காரில் சென்றுள்ளார். ஆனால் வாலிபர் அவரது வீட்டில் கொண்டு சென்று அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இதை யாரிடமாவது கூறினால் கொலை செய்வதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கிடையில் மீண்டும் அந்த வாலிபர் அந்தப் பெண்ணை போன் மூலம் மிரட்டி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சம்பவத்தைக் கணவரிடம் அந்த பெண் கூறினார். இதை அடுத்து அந்த வாலிபரின் வீட்டில் சென்று அவர் மனைவியிடம் இளம்பெண் புகார் கூறினார். ஆனால் மனைவி மற்றும் உறவுகள் சேர்ந்து இளம் பெண்ணை தாக்கியுள்ளனர். காயமடைந்த இளம் பெண் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். குழித்துறை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.