குளச்சல், செப். 19 –
குளச்சல் அருகே ஆசாத்நகரை சேர்ந்தவர் முகமது சுதீர் என்பவர் 6 வயது மகள் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறாள். இவர் நேற்று டியூஷன் சென்று விட்டு அப்பகுதியில் நடந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சுனாமி காலனியை சேர்ந்த அபூபக்கர் மகன் அர்ஷிப் (23) என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக சிறுமி மீது மோதியது. இதில் காயமடைந்த சிறுமி குளச்சலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சிறுமியின் தாய் தாகிரா பிவி (39) என்பவர் குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விபத்து ஏற்படுத்தியதாக அர்ஷிப் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


