குளச்சல், ஏப். 2 –
மார்த்தாண்டம் அடுத்த முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (48). இவர் பொதுப்பணி துறையில் ஒப்பந்த காண்ட்ராக்டராக பணி செய்து வருகிறார். தற்போது குளச்சல் நகராட்சிக்குட்பட்ட பாம்பூரிவாய்க்காலில் தடுப்பு சுவர் கட்டும் பணியை ஒப்பந்தம் எடுத்திருந்தார். இதற்காக கட்டுமான பொருட்கள், தளவாட சாமான்கள் போன்றவற்றை பாம்பூரிவாய்க்கால் பகுதிக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டு இருந்தது.
கடந்த ஆறு மாத காலமாக தடுப்பு சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று தடுப்பு சுவர் கட்டும் பணிக்காக வைக்கப்பட்டிருந்த மோட்டார், 140 லிட்டர் டீசல் மற்றும் சுத்தியல், டூல்ஸ் பாக்ஸ், வயர், வெல்டிங் இயந்திரம் உள்ளிட்ட ரூபாய் 30,000 மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து பிரேய்குமார் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


