குளச்சல், அக். 6 –
வெள்ளி சந்தை அருகே கீழ முட்டம் பகுதியை சேர்ந்தவர் சகாய ஜோஸ் ஆண்டனி (21). மீன்பிடி தொழிலாளி. இவர் சம்பவ தினம் நள்ளிரவில் குளச்சல் பகுதிக்கு வந்துள்ளார். பின்னர் அங்குள்ள ஒரு வீட்டில் பெண் மட்டும் வசித்து வருவதை ஏற்கனவே அறிந்த சகாய ஜோஸ் ஆண்டனி, நைசாக அந்த வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் 36 வயது உடைய பெண் மட்டும் தூங்கிக் கொண்டிருந்தார். அந்த சமயம் வாலிபர் தான் கொண்டு வந்த கத்திரிக்கோலால் பெண்ணின் ஆடையில் அந்தரங்க பகுதியை கத்தரித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். ஆடை கிழிவதை அறிந்து திடுக்கிட்டு எழுந்த பெண் தனக்கு பாலியல் சீண்டல் கொடுப்பதை பார்த்து கதறி சத்தம் போட்டார். இதனால் கத்தரிக்கோலை காண்பித்து கொலை மிரட்டல் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இது குறித்து அந்தப் பெண் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி குளச்சல் பகுதியில் பதுங்கி இருந்த சகாய ஜோஸ் ஆண்டனியை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் தனியாக நடந்து செல்லும் பெண்கள், வீட்டில் தனியாக படுத்திருக்கும் பெண்களின் ஆடையில் அந்தரங்க பகுதியில் மட்டும் கத்தரித்து பார்த்து ரசித்து வரும் சைக்கோ என்பது தெரிய வந்தது. ஆனால் குளச்சல் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சகாய ஜோஸ் ஆண்டனியை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான வாலிபர் மீது இதுவரை ஒரு போக்சோ உட்பட மூன்று வழக்குகள் போலீஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


