கன்னியாகுமரி மே 15
குமரி கோவில்களில் நடிகை நயன்தாரா கணவனுடன் சாமி தரிசனம். பிரபல திரைப்பட நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் சுசீந்திரம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைபதிக்கு வந்தனர். பின்னர் பதிக்குள் சென்ற நடிகை நயன்தாரா நெற்றியில் திருநாமம் இட்டு அய்யா வைகுண்டரை வழிபட்டார் தொடர்ந்து கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தார் .
இதையடுத்து,அங்கிருந்து புறப்பட்ட நடிகை நயன்தாரா கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வந்தார் .அங்கு பகவதி அம்மனை தரிசனம் செய்தார் .கோயில்களில் சாமி தரிசனம் செய்த போது நடிகை நயன்தாராவுடன் பக்தர்கள் பலர் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.