நாகர்கோவில், ஜூன் 26 –
திருநங்கைகள், திருநம்பிகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாக நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் திருநங்கைகள் நல வாரியம் மூலம் வழங்கப்படும் திருநங்கை, திருநம்பி அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை மற்றும் ஆதார் அட்டையில் திருத்தம் போன்றவை பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான திருநங்கைகள், திருநம்பிகள் கலந்து கொண்டனர். இதுவரை திருநங்கை நல வாரியத்தால் வழங்கப்படும் அடையாள அட்டை பெறாத திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் தங்களுடைய ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பித்தனர்.
மேலும் வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை மற்றும் ஆயுஸ்மான் பாரத் அட்டை போன்றவைகள் இதுவரை பெறாத திருநங்கைகள் மற்றும் திரு நம்பிகள் தங்களுடைய குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை இவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பித்தனர். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.