நாகர்கோவில், செப்டம்பர் 15 –
குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை மூலம் திங்கள் சந்தை, புதுக்கடை சாலை கி.மீ. 11/10 ல் திக்கணங்கோடு சந்திப்பில் பாலம் கட்டும் பணி நடக்கிறது. அந்த வழியாக செல்லும் 79 விழியோர கடலோர கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தின் 500 மில்லி மீட்டர் விட்டம் உள்ள குடிநீர் குழாய் மாற்றியமைக்க வேண்டியுள்ளதால் குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
அகஸ்தீஸ்வரம், அஞ்சுகிராமம், தென்தாமரைக்குளம், கல்லுக்கூட்டம், மண்டைக்காடு, திங்கள்நகர், வெள்ளிமலை, கணபதிபுரம், புத்தளம் பேரூராட்சிகளுக்கும் மற்றும் கோவளம், லீபுரம், மகாராஜபுரம், பஞ்சலிங்கபுரம், முட்டம், ஆத்திக்காட்டு விளை, தர்மபுரம், மணக்குடி, பள்ளம், ராஜக்கமங்கலம், திக்கணங்கோடு ஆகிய ஊராட்சிகளுக்கும் 10 தினங்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது என பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


