நாகர்கோவில், மார்ச் 18 –
குமரி மாவட்ட காவல்துறை சார்பில் சார்பில் தேர்தல் தொடர்பான புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும், சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட நபர்கள் தொடர்பான விமர்சனங்களை கண்காணிக்கவும், சோதனை சாவடிகளை 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கும் வகையிலும், ஒருங்கிணைந்த சிறப்பு கட்டுப்பாட்டு அறை நாகர்கோவிலில் உள்ள எஸ் பி அலுவலகத்தில் அமைக்கப்பட்டது. இந்த கட்டுப்பாட்டு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: பொதுமக்கள் அவர்களுடைய சட்டமன்ற தொகுதியில் பணப்பட்டுவாடா உட்பட ஏதேனும் தேர்தல் விதிமுறை மீறல்களில் இருந்தால் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு செல்போன் எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த எங்களுக்கு பொதுமக்கள் நேரடியாக புகார் தெரிவிக்கலாம் ஏதேனும் புகைப்பட வீடியோ ஆதாரங்கள் இருந்தால் உடனடியாக அனுப்பி வைக்க முடியும். தகவல் கூறும் பொதுமக்கள் உடைய தகவல்கள் ரகசியம் காக்கப்படும்.
தேர்தல் சம்பந்தமான அவதூறு கருத்துக்கள், தேர்தல் விதிமுறை மீறி சமூக வலைத்தளங்களில் பதிவிடுதல், ஆகியவை கண்காணிக்கப்பட்டு உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களிடமிருந்து பெறப்படக்கூடிய தகவல்கள் மூலம் பிரச்சினைக்குரிய இடங்கள் அமைந்திருக்கக் கூடிய காவல் நிலைய எல்லைக்குள் பணியில் இருக்கக்கூடிய அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கும் வகையில் காவல் கட்டுப்பாட்டு அறையும் அமைந்துள்ளது. மேலும் அனைத்து சோதனை சாவடிகளையும் இந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்தே கண்காணிக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள், வாட்சப் எண்கள் எஸ் பி யிடம் நேரடியாக புகாரளிக்க 8122223319, 7708239100 என்ற எண்களிலும், நாகர்கோவில் தொகுதி – 7358776100; குளச்சல் தொகுதி – 7358068100; கிள்ளியூர் தொகுதி – 7358034100; கன்னியாகுமரி தொகுதி – 7305282100; விளவங்கோடு தொகுதி – 7358063100; பத்மநாதபுரம் தொகுதி – 7397463100 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இந்த வாய்ப்பினை ஒவ்வொரு குடிமகனும் பயன்படுத்தி நேர்மையான தேர்தலை உறுதி செய்திட மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்கின்றேன் என பேசினார்.



