கிருஷ்ணகிரி, ஜூன் 20 –
ரோட்டரி கிளப் சார்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு திட்டப் பணிகளை செய்து வருகிறது. தற்போது ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ரோட்டரி கிளப் ஆப் கிருஷ்ணகிரி, ரோட்டரி கிளப் ஆப் ஓசூர், ரோட்டரி கிளப் மிட்டவுன் ஓசூர், ரோட்டரி கிளப் ஆப் சிப்கார்ட் ஓசூர் ஆகியன இணைந்து ஓசூர் கிளைகள் சார்பாக ரூ.41,93,399 மதிப்பீட்டிலும், கிருஷ்ணகிரி கிளப் சார்பாக ரூ.25,94,706 என மொத்தம் ரூ.67,88,105 மதிப்பில் 8 டயாலிசிஸ் உபகரணங்கள் வழங்கி உள்ளனர். ரோட்டரி கிளப் வழங்கியுள்ள 8 டயாலிசிஸ் உபகரணங்களை நல்ல நிலையில் பயன்படுத்தி பொதுமக்களுக்கு சிறந்த மருத்துவ சேவை அளிக்கப்படும். மேலும், இதுபோன்ற பல்வேறு திட்டங்களுக்கு ரோட்டரி கிளப் சார்பாக நிதி ஒதுக்கீடு செய்து ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கண்காணிப்பாளர் பி.சந்திரசேகரன், துணை முதல்வர் மரு.சாத்விகா, உள்ளிருப்பு மருத்துவ அலுவலர்கள் மரு.செல்வராஜ், மரு.மது, மரு.தினேஷ், ரோட்டரி கிளப் மாவட்ட கவர்னர் வி.சிவகுமார், ரோட்டரி கிளப் நிர்வாகிகள் எஸ்.லோகநாதன், கே.பாபு, பார்த்திபன் கிருஷ்ணன், வி.சிவராமன், நிவால்டோ கேநிலா, சுரோஷ் குப்தா, மரு.நவீனா, அரவிந் திரு.அசோக் நாயுடு, பிரேம்குமார், மகேஷ், அனைத்துத் துறை பேராசிரியர்கள் மற்றும் இணைப் பேராசிரியர்கள், டயாலிசிஸ் பிரிவு சிறப்பு மருத்துவர், செவிலியர் மற்றும் ரோட்டரி கிளப் மகளிர் குழுவின, லையன்ஸ் கிளப் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.