கிருஷ்ணகிரி, அக்டோபர் 04 –
புரட்டாசி என்றதுமே அனைவருக்கும் நினைவிற்கு வரும் அடுத்த விஷயம், புரட்டாசி சனிக்கிழமை விரதம் மற்றும் வழிபாடு தான். இந்த நாளில் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு தளிகையிட்டு வழிபடுவது பலரது வழக்கம். புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்புக்குரியதாகும். இருந்தாலும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் மிக மிக விசேஷமான நாளாக கருதப்படுகிறது. புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் கடைபிடிக்க முடியாதவர்கள், புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் மட்டுமாவது விரதம் இருந்து பெருமாளை வழிபடலாம்.
இதனால் பெருமாளின் அருள் கிடைப்பதுடன், சனி பகவானால் ஏற்படும் தீய பலன்கள் குறைந்து அவரின் அருளும் கிடைக்கும். புரட்டாசி மாதத்தில், குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் எவர் ஒருவர் விரதம் இருந்து பெருமாளை வழிபடுகிறாரோ அவரை சனி பகவான் துன்புறுத்துவது கிடையாது. மாறாக அவர்களுக்கு நன்மைகளை மட்டும் வழங்குவதாக திருப்பதி ஏழுமலையானிடம் சனி பகவான் வாக்குறுதி அளித்திருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இவற்றில் இரண்டாவது மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் நவராத்திரி பண்டிகை வருவது இன்னும் கூடுதல் சிறப்பானதாகும். இத்தகைய மகத்துவம் வாய்ந்த புரட்டாசியில் இந்த ஆண்டு நான்கு சனிக்கிழமைகள் வருகின்றன.
இதில் நடுசனியான இன்று மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்று கிருஷ்ணகிரியில் நெடு சனியை முன்னிட்டு கிருஷ்ணகிரியை அடுத்த கணவாய்பட்டி வெங்கட்ரமண சுவாமி கோயிலில் அருகே, தேமுதிக கிழக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் ஆர் சண்முகம் தலைமையில் சுமார் 5000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த அன்னதான நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் இந்த அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாப்பிட்டனர்.
மாவட்ட கழக பொருளாளர் வி.லட்சுமணன் முன்னிலையில், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.முருகன் வரவேற்புரையில், மாவட்ட கழக செயலாளர் கே.ஆர்.சின்னராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார். கிட்டம்பட்டி ஊர் சின்னகவுண்டர் மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர் பி.சி.கனக்கன், காம்ப்ளக்ஸ் (எ) திம்மராயன், ரவி, பச்சையப்பன், ஆர்.பி.சிக்கன் வி.பெருமாள், மீனாட்சி மஹால் பெட்டிக்கடை ஜலா, ஆர்.ராஜேந்திரன், கோவிந்தசாமி, கோவிந்தன், கருத்தப்பன், குமார், ராமன், பெரியசாமி, லட்சுமணன், உள்ளிட்ட கழக கண்மணிகள் ஏற்பாட்டின் பேரில் இந்த அன்னதானம் நடைபெற்றது.



