கிருஷ்ணகிரி, ஆகஸ்ட் 26 –
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் பல இடங்களில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேமுதிக கிழக்கு மாவட்ட செயலாளர் சின்னராஜ் வழிகாட்டுதலின்படி முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ். சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்கு ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் ராமன், ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் குமார், தோமுசா சைனு துணை மாவட்ட செயலாளர் ஹரி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தேமுதிகவினர் கேப்டன் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனை அடுத்து பிறந்தநாள் விழா கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. பின்னர் ஆட்டோ சங்க நிர்வாகிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், அங்கு கூடி இருந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வெஜிடபிள் பிரியாணி வழங்கினார்கள். கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் ஆட்டோ சங்க மாவட்ட தோமுசா தென்னரசு சீனிவாசன் சங்கர் சிவா கோவிந்தன் பூந்தோட்டம் வடிவேல் ஜெயச்சந்திரன் மற்றும் தேமுதிக நிர்வாகிகளான பார்க்சிவா, பார்க்கோவிந்தன், பார்க்பழனி, ஆயில்சங்கர், மணியரசன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



