களியக்காவிளை, பிப். 17 –
களியக்காவிளை அருகே கைதக்குழி பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன் பள்ளத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் களியக்காவிளை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடம் வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். அந்த பகுதி சி.சி.டி.வி காமிரா பதிவுகளை ஆராய்ந்தனர்.
விசாரணையில் இறந்த வாலிபர் ஜார்கண்டு மாநிலம் டாப்கரா கும்லா பூஜன்கா டிப்பாட்டோலா என்ற இடத்தை சார்ந்த துருஓரான் மகன் திலிப் டிரிக்கி (40) என்பது தெரிய வந்தது. இவர் களியக்காவிளை பகுதியில் தங்கி இருந்து கல் உடைக்கும் தொழில் செய்து வந்துள்ளார். அப்போது சம்பவத்தன்று இரவு கைதக்குழி பகுதி வழியாக நடந்து சென்ற போது தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆகவே போலீசார் உறவினர்களை வரவழைத்து சடலத்தை ஒப்படைத்தனர். அவர்கள் குழித்துறை மின் மயானத்தில் சடலத்தை எரித்து விட்டு சாம்பலை பெற்றுச் சென்றுள்ளனர்.



