விழுப்புரம், ஆகஸ்ட் 03 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை துறை சார்பில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் க. பொன்முடி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா. இலட்சுமணன் ஆகியோர் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் முகாமினை துவக்கி வைத்து மருத்துவ முகாமினை பார்வையிட்டனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்கள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் சுகாதாரத்துறையில் மக்களைத் தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48, கலைஞரின் வரும்முன் காப்போம் போன்ற பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி, பொதுமக்கள் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்கள்.
இதன் தொடர் நிகழ்வாக, இன்றைய தினம், தமிழ்நாடு முதலமைச்சர் , சென்னை, சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை துறை சார்பில் “நலம் காக்கும் எஸ்டாலின்” திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் “நலம் காக்கும் எஸ்டாலின்” திட்டம் முகாம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், இன்றைய தினம், விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், “நலம் காக்கும் எஸ்டாலின்” திட்ட முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் மூலம் அனைத்து வகையான உடல் பரிசோதனைகளும், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு மருத்துவம். பேறுகால மருத்துவம். குழந்தை நல மருத்துவம், இதயநல மருத்துவம், நரம்பியல் மருத்துவம், நுரையீரல் மருத்துவம், நீரிழிவு நோய்கான மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், சித்தா மருத்துவம், உணவியல் ஆலோசணை ஆகிய 17 மருத்துவ சிகிச்சைகளுக்கு சிறப்பு மருத்துவ நிபுணர்களால் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொடர்ந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இம்முகாமில் அனைத்து சிகிச்சைகளும் பரிசோதனைகளும் ஆன்லைன் செய்யப்படவுள்ளது. மேலும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதய நோயாளிகள், படுக்கையுற்ற நோயாளிகள் மற்றும் மாற்றுதிறனாளிகளை இலக்காக கொண்டு இம்முகாம்கள் நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில், 02.08.2025 முதல் தொடங்கி 01-11-2025 வரை 13 வட்டாரங்களிலும் (வட்டாரத்திற்கு தலா 3 முகாம்கள் வீதம்) 39 நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் முகாம் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் (அரசு விடுமுறை நாட்கள் தவிர) அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படவுள்ளது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் நடைபெறும் “நலம் காக்கும் எப்டாலின்” திட்டம் முகாமில் கலந்துகொண்டு, மருத்துவ சேவைகளை பெற்று தங்கள் உடல் நலனை நல்ல முறையில் பாதுகாத்துக்கொண்டு பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கல்லி மற்றும் சுகாதாரத்துறையினை தனது இரு கண்கள் போல் எண்ணி பல்வே சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி, பொதுமக்களின் நலனை பாதுகாத்து வருகிறார்கள்.
அதனடிப்படையில் இன்றைய தினம், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னை, சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை துறை சார்பில் “நலம் காக்கும் எஸ்டாலின்” திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்கள்.
அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களில் 39 மருத்துவ முகாம்கள் சனிக்கிழமையன்று காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில், 17 மருத்துவ சேவைகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் சிறப்பு மருத்துவ நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் கிராமப்புறங்களில் உள்ள மக்களின் மருத்துவ தேவைகளை முழுமையாக நிறைவேற்றிட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடனும், முன்னுரிமை அடிப்படையில் மூத்த குடிமக்கள், கர்ப்பிணிப்பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலனை பாதுகாத்திடும் விதமாகவே “நலம் காக்கும் எஸ்டாலின்” திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்கள். எனவே, விழுப்புரம் மாவட்டத்தினைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் முகாம்களில் கலந்துகொண்டு உயர்ரக மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு பெற்று பயனடைந்திட வேண்டும் என திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க.பொன்முடி அவர்கள் தெரிவித்தார்.