கருங்கல், ஜூன் 24 –
கருங்கலில் நவீன மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மீன் மார்க்கெட்டில் உள்ள சில கடைகளில் கெட்டுப்போன அழுகிய மீன்கள் விற்கப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் தொடர் குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதையடுத்து குமரி மாவட்ட சுகாதார அலுவலர் பிரபாகரன் உத்தரவின் பேரில் கிள்ளியூர் வட்டார சுகாதார அலுவலர் ஐயப்பன் தலைமையில் மீன்வளத் துறை ஆய்வாளர் ஷாமிலி, கிள்ளியூர் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெப்ரிமோள் உள்ளிட்ட சுகாதார ஆய்வாளர்கள், கருங்கல் பேரூராட்சி செயல் அலுவலர் சத்யராஜ் மற்றும் பணியாளர்கள் கருங்கல் வெள்ளியாவிளை சந்தைப் பகுதிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கருங்கலில் 25 கிலோ கெட்டுப்போன மீன்கள் மற்றும் வெள்ளியாவிளையில் 14 கிலோ கெட்டுப் போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.