வேலூர், ஜூலை 15 –
வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.12.67 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கம்மவான்பேட்டை நியாய விலை கடை கட்டடத்தை மாவட்ட ஆட்சியர் வே.இரா. சுப்புலெட்சுமி திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல். ஈஸ்வரப்பன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பூ. காஞ்சனா, கணியம்பாடி ஒன்றியக்குழுத்தலைவர் திவ்யா கமல்பிரசாத், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், ஜெயலட்சுமி ஏழுமலை, கம்மவான்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.