கன்னியாகுமரி, மே 16 –
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் முன்பு இன்று காலை திடீர் தர்ணா போராட்டம் நடைபெற்றது. கோவிலின் பக்தர்கள் நல சங்க தலைவர் வக்கீல் சிவக்குமார் நாகப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர இடையூறு செய்யும் அதிகாரிகள், பாபநாசம் கால்வாயை பாழ்படுத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோரை கண்டித்து இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக அதில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.



