களியக்காவிளை, செப். 19 –
கன்னியாகுமரி மாவட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் களியக்காவிளை பேரூராட்சிக்குட்பட்ட படந்தாலுமூடு சேக்ரட் ஹார்ட் மேல்நிலைப்பள்ளியில் நாளை (செப்டம்பர் 20) நடக்கிறது.
நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிட்சை, எலும்பியல், மருத்துவம், மகப்பேறு மருத்துவம், மகளிர் சிறப்பு மருத்துவம், குழந்தைகள் சிறப்பு மருத்துவம், இருதவியல், தோல், பல், கண், காது, மூக்கு, தொண்டை, மனநலம், பிசியோதெரபி, கதிரியக்கவியல், நுரையீரல், நீரழிவு, சித்த மருத்தவம் உள்ளிட்ட முழு உடல் 17 வகையான சிறப்பு வாய்ந்த உயர் சிகிட்சை மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு வழங்க உள்ளனர். அத்துடன் முதல் அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை மாற்றுத் திறனாழிகளுக்கான சான்றிதழ்கள், தொழிலாளர்கள் நல வாரிய அட்டை உள்ளிட்டவைகள் வழங்கப்படும். இந்த மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.


