திருப்பூர், பிப். 12 –
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ரோடு கணபதி பாளையம் ஜெயலட்சுமி இல்லத்தை சேர்ந்தவர் குணா. இவரது மனைவி மஞ்சு. இவர்களது மகள் விதுஷா (6). வேலம்பாளையம் ஜெய் சாரதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் இவர் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார். கணிதம் வினாத்தாளை 51 வினாடிகளில் படித்து உலக சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன் கிட்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் ஆப் இந்தியா புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது. இது இவரின் மூன்றாவது உலக சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் சாதனையை திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.


