பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2005ம் ஆண்டு முதல், தரம் வாய்ந்த பல்வேறு சான்றிதழ், முதுநிலைப் பட்டம் மற்றும் முதுநிலைப் பட்டயப் படிப்புகளை உயர்தொழில்நுட்பத்துடனும் செயல் முறை விளக்கங்களுடனும் அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகளைக் கொண்டு நடத்தப்படுகிறது. அந்த வகையில், சுய தொழில் வாய்ப்பு பெறும் வகையில், ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக் கத்தின் மூலம் நடைபெற்று வருகிறது.
வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த உபதொழில்களில் ஈடுபட்டுள்ள உழவர் பெருமக்கள் மற்றும் சுயதொழில் தொடங்க ஆர்வம் கொண்டவர்கள். இப்புதிய தொழில்நுட்ப பட்டயப்படிப்பு வழங்கப்படுகிறது. இந்த பட்டயப்படிப்பினை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்துார் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டுவரும் கல்லுாரிகள், வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண்மை அறிவியல் நிலையங்கள் மற்றும் தோட்டக்கலை மையம், சென்னை ஆகிய இடங்களில் நேரடி பயிற் சிகள் மூலம் நடத்தப்பட வுள்ளது. 2024-25ம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப் பங்கள் பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வழங்கப்படுகிறது விண்ணப்பம் கட்டணம் நூறு ரூபாய் வடிவத்தை சேரும் 18 வயது நிரம்பிய பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம் இது இரண்டு பருவங்களாக கொண்டு பயிற்சி கட்டணம் 25,000 ஆகும் தர்மபுரி மாவட்டத்தில் சேர்ந்த சுய தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள் இம்மாதம் இறுதிக்குள் பாப்பாரப்பட்டி வேளாண்மை நிலையத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் மேலும் விவரங்களுக்கு பாப்பாரப்பட்டி அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது