கீழக்கரை மே 11
ஏர்வாடி தர்ஹா சந்தனக் கூடு எனும் மதநல்லிணக்க விழா நேற்று முதல் தொடக்க நிகழ்ச்சியான மவ்லீது ஷரீபுடன்(புகழ் பாடல்) கோலாகலமாக தொடங்கியது. ராமநாதபுரம். மாவட்டம் ஏர்வாடி தர்ஹா வில் அனைத்து மதத்தினரும் பங்கேற்கும் நிகழ்ச்சியாக சந்தனக்கூடு எனும் மதநல்லிணக்க விழா வருடந் தோறும் கொண்டாட பட்டு வருகிறது. இந்த வருடமும் சந்தனக் கூடு எனும் மதநல்லிணக்க விழா மவ்லீது ஷரீபுடன் தொடங்கியது. இந்த புகழ் மாலை பாடல் தொடர்ந்து 23 நாட் களுக்கு தர்ஹா மண்டபத்தில் தர்ஹா ஹக்தார்கள் மற்றும் மார்க்க அறிஞர்களால் ஓதப்படும். அடுத்த நிகழ்ச்ச்சியான மே 19ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சி சந்தனக்கூடுதைக்காவில் இருந்து பாதுஷா நாயகத்தின் பச்சை வர்ண கொடியை யானை மேல் வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தர்ஹா முன்புறம்உள்ள மேடையில் கொடியேற்றமும், முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு எனும் மதநல்லிணக்க விழா மே 31 ம் தேதி மாலை தொடங்கி ஜூன் 1 ம் தேதி அதிகாலை 3மணியளவில் ஏர்வாடி முஜாவீர் நல்ல இபுராஹீம் சந்தனக்கூடு தைக்காவில் இருந்து கரைக்கப்பட்ட சந்தனம் வெள்ளி பேழையில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூட்டுல் வைத்து. யானைகள் அணிவகுக்க, நாட்டியக்குதிரைகள் நாட்டியமாட வான வேடிக்கைகளுடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு தர்ஹாவை வந்தடைந்து 3 முறை வலம் வந்த பின் பாதுஷாநாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசப்படும். இறுதிநிகழ்ச்சி.ஜுன்7ம் தேதிமாலை 5 மணியளவில் கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறும் கொடி இறக்கிய பின்பு பக்தர்களுக்கு தப்ரூக் எனும் நெய்ச்சோறு வழங்கப்படும். இத்துடன் 850ம் ஆண்டு சந்தனக்கூடு எனும் மதநல்லிணக்க விழா நிறைவடையும். விழாவிற்கான ஏற்பாடுகளை தர்ஹா ஹக்தார் நிர்வாக சபையினர் செய்து வருகின்றனர்.
ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா தொடக்கம் 19ஆம் தேதி கொடியேற்றம்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics