கீழக்கரை மே 9-
ஏர்வாடியில் சுல்தான் இப்ராஹிம் பாதுஷா நாயகம் தர்கா உள்ளது புண்ணிய ஸ்தலமாக விளங்கும் ஏர்வாடியில் நாள்தோறும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் யாத்திரிகர்களும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் வழிபாட்டிற்காக வந்து செல்கின்றனர் தனியார் விடுதிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்து வந்தது சந்தனக்கூடு திருவிழா காலங்களில் ஏற்கனவே உள்ள நாட்களை காட்டிலும் 10 மடங்கு கூடுதலாக தனியார் விடுதி உரிமையாளர்கள் வசூலித்து வந்தனர் இதுகுறித்து வந்த புகாரின் அடிப்படையில் கீழக்கரை தாசில்தார் பழனி குமார் தலைமையில் நேற்று தாலுகா அலுவலகத்தில் தனியார் விடுதி உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது தாசில்தார் பழனி குமார் தலைமை வகித்து கூறியதாவது ஒவ்வொரு தனியார் விடுதியிலும் வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்யக்கூடிய விவரப் பட்டியலை வைக்க வேண்டும் வாடிக்கையாளர்களிடமிருந்து கூடுதல் கட்டணம் பெறப்படுவதாக புகார் எழுந்தால் சம்பந்தப்பட்ட கட்டிட த்தின் உரிமம் ரத்து செய்யப்படும் அபராதம் விதிக்கப்படும் எனவே முறையான வழிகாட்டுதல் ஒன்று நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார் துணை தாசில்தார் பரமசிவம் ஆர் ஐ வேல்முருகன் விஏஓ மாரியப்பன் உட்பட தனியார் விடுதி உரிமையாளர்கள் 55 பேர் கலந்து கொண்டனர்