கோவை, செப். 05 –
கோவை மாவட்டம் வெள்ளலூரிலுள்ள எஸ்எஸ்விஎம் கல்விக் குழுமம் சார்பில் நடைபெற்ற
உருமாறும் இந்தியா 2025 மாநாட்டின் 4-வது பதிப்பில் இன்ஸ்பிரேஷனல் குரு அவார்ட் 2025 வழங்கப்பட்டன. விழாவில் இளம் தலைமுறையினரை உருவாக்கத் தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்த சிறந்த ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
எஸ்எஸ்விஎம் கல்விக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் மேலாண்மை அறங்காவலர் டாக்டர் மணிமேகலை மோகன் வரவேற்புரை வழங்கி பேசுகையில், நாளைய இந்தியா ஏஐ மட்டுமல்ல, மனிதம் மட்டுமல்ல இரண்டும் இணைந்து உருவாக்கும் பங்குதான் என்றார். மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட ரோஹித் கபூர், பிரகாஷ் பதுக்கோண், சுரேஷ் நாராயணன், சஞ்சய் ஜெயின் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து 20 சிறந்த ஆசிரியர்கள் இன்ஸ்பிரேஷனல் குரு அவார்டு 2025 தேசிய விருது பெற்றனர். மேலும் 14 ஆசிரியர்கள் எஸ்.எஸ்.வி.எம் எஜுகேஷன் பிரிவில் கவுரவிக்கப்பட்டனர். மூன்று நாட்களாக நடைபெற்ற நிகழ்ச்சி அனைத்தும் முழுமையாக நிறைவு பெற்றது.



