சென்னை, அக்டோபர் 06 –
புதிய சிந்தனைகளில் பயணிக்கும் முயற்சியாக “நயி சோச் கி சவாரி” என்ற பெயரில் சேலம், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, சென்னை போன்ற நகரங்களில் கருத்தரங்க அமர்வுகள் நடைபெற்றது. இதுவரை, நயி சோச் கி சவாரி முயற்சியின் கீழ் நாடு முழுவதும் 120 நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
இதன் நோக்கம் 3 கோடி நபர்களுக்கு மேலுள்ள முறை சாரா டிரக் பயனாளிகளுக்கும் மின்சார டிரக் தொழில்நுட்பத்திற்கும் இடையிலான இடைவெளியை குறைப்பது . இந்த அமர்வுகள் இதுவரை சுமார் 4000 பேரை சென்றடைந்துள்ளன, இதில் டிரக் டிரைவர்கள், மெக்கானிக்குகள் மற்றும் டிரக் உரிமையாளர்கள் அடங்குவர். சென்னையில் டிரக் டிரைவர்கள், தொழில் சார்ந்த பணியாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து முகமது முபாரக் கூறியதாவது: இந்தியாவின் மின்சார டிரக் பயணத்தை வடிவமைக்கும் செயலில் ஈடுபட்ட குரல்களாக டிரைவர்கள், மெக்கானிக்குகள், மற்றும் டிரக் உரிமையாளர்களை மாற்றி வருகிறது. காரணம் “மின்சார டிரக்குகள் சுற்றுச்சூழலுக்கு நன்மை தருகின்றன. காற்று, மாசு இல்லாத போது அனைவருக்கும் நற்பயன் கிடைக்கும் என்று கூறினார்.
மேலும் மின்சார டிரக்குகள் காற்று மாசை குறைக்க உதவும் என நம்பும் 83% (290) டிரக் டிரைவர்களில் ஒருவரான நிசார் அஹ்மத் கூறுகையில், உதாரணமாக மின்சார டிரக்குகள் குறைவாக வெப்பமடைகின்றன மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் கொண்டுள்ளன என்பது எனக்கு தெரியாது. இவை டிரைவர்களின், ஆரோக்கியத்தையும், வாழ்க்கை தரத்தையும் உயர்த்திக் கொள்ள வழிவகை செய்கிறது என்றார்.



