சென்னை, செப். 29 –
வீரியான் டெக்’ நிறுவனம் சார்பில் இந்தியாவின் முதலாவது ஏஆர் மற்றும் விஆர் அடிப்படையிலான ‘நீட் கற்றல் தளமான ‘எட்சார்’ தளம் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த தளம் ஏஆர் மற்றும் விஆர் அடிப்படையிலான 3டி படங்களுடன் வீடியோ சொற்பொழிவுகள்,விரிவான குறிப்புகள், செயற்கை நுண்ணறிவு பகுப்பாய்வுகள், மாதிரி தேர்வுகள், 10,000க்கும் மேற்பட்ட கேள்விகள், கடந்த ஆண்டுகளின் கேள்வித் தொகுப்புகள் முதலியனவற்றை வழங்குகிறது.
கைபேசி மற்றும் டெஸ்க்டாப் இரண்டிலும் பயன்படுத்தக்கூடிய ‘எட்சார்’ புத்தகங்களுடன் ஒரு ஆண்டுக்கான சந்தா கட்டணம் ரூ.23,999 என்று மலிவு விலையில் கிடைக்கிறது. இது
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு படிக்க வாய்ப்பாக அமைகிறது. மருத்துவராக தகுதி பொருளாதாரம் அல்ல. சீரிய கல்வி அறிவு ஒன்றே போதும் என்ற அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட எட்சார் நீட் தேர்வுக்கான பாடத்திட்டத்தை ப்ளஸ் ஒன் வகுப்பிலிருந்து பயிலலாம்.
முன்னாள் ஐஜி டாக்டர் எம். ராமசுப்பிரமணி இயக்குனராக உள்ள வீரியான் டெக்’ நிறுவனம் சார்பில் எட்சார் தளம் அறிமுக நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் பண்டி கங்காதர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சுடர், ஜேம்ஸ் மருத்துவமனை கல்லுாரிகள் தலைவர் ஜேம்ஸ் பிரேம்குமார், உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ஏ.ஜே. சகாயராஜ், தஞ்சாவூர் பாம்பே ஸ்வீட்ஸ் லட்சுமி, நடிகர் தாமு, மதுரை பராசக்தி கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த டாக்டர் ஜெகதீசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும் உழைக்கும் பத்திரிகையாளர் சங்க மாநில நிர்வாகிகள் சாமிநாதன், கிறிஸ்டோபர், ஆண்டனி செல்வா, ஜெய்சங்கர், வல்லரசு, இஸ்மாயில், லஷ்மி, ராஜாராம், மற்றும் நவ் ஷாத், அருள்நாதன், குணா, காந்தி, எட்வின் ஜோசப் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



