ஈரோடு, செப்.30-
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள நஞ்சநாடு கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜூ னன். தேயிலை தொழிலாளி. இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்தார் அங்கு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட் டது. இதனால் அர்ஜூனனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன் வந்தனர்.இதை
தொடர்ந்து மருத்துவ குழுவினர் அவரது உடல் உறுப்புகளை மற்றவர்களுக்கு பொருத்தும் வகையில் பாதுகாப்பாக எடுத்தனர்.
அர்ஜூனனின் ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஈரோட் டில் உள்ள அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் உடல் உறுப்புமாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் ஒரு பெண் உள்பட 2 நோயா ளிகளுக்கு வழங்க அனுமதிக் கப்பட்டது.
இதனால் உடல் உறுப்புகள் வைக்கப்பட்ட பெட்டி காரில் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது. உடல் உறுப்புகள் ஏற்றி வந்த காருக்கு வழி நெடுகிலும் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி
எந்த இடையூறும் இல்லாமல் செல்ல ஏற்பாடு செய்தனர். இதனால் ஊட்டியில் இருந்து ஈரோட்டுக்கு உடல் உறுப்புகள் ஏற்றி வந்த கார் இரண்டு மணி நேரத்தில் ஈரோடு வந்து சேர்ந்தது. இந்த உடல் உறுப்புகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வெற்றிகரமாக ஆபரேஷன் மூலம் பொருத்தப்பட்டது ஆபரேஷனுக்கு பிறகு இரண்டு நோயாளிகளும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்
இது குறித்து அபிராமி கிட் னிகேர் மருத்துவமனை நிர்வாக இயக்குனரும் இந்திய மருத்துவ சங்க ஈரோடு மாவட்ட தலைவருமான டாக்டர் சரவணன் கூறும் போது எங்கள் மருத்துவமனையில் உறுப்புமாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து உள்ளோம். இதற்கு காரண மான அர்ஜூனன் குடும்பத் தினருக்கும் பாதுகாப்பு பணி களை செய்த காவல்துறையினருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் உடல் உறுப்புகள் தானம் செய்வது குறித்து பொதுமக்களிடம் இன்னும் அதிகமாக விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று கூறினார்.