நாகர்கோவில், மார்ச் 6 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் நிலையங்களை ஆய்வு செய்ய ரயில்வே அதிகாரிகள் இன்று வந்தனர். அதிகாரிகள் இரணியல் ரயில் நிலையம் வந்த போது, குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பியூட்லின் ஜீவா தலைமையில், இரணியல் ரயில்வே நிலையத்தில் 5வது நடைமேடை அமைத்து அத்தியாவசிய பணிகளை உடனடியாக செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவை ரயில்வே நிலையத்தில் ஆய்வு செய்ய வந்த ரயில்வே அதிகாரிகளிடம் வழங்கினர்.
ஆனால் அதிகாரிகள் அந்த மனுவை வாங்க மறுத்து மனு அளிக்க வந்த யாரையும் சந்திக்காமல் ஒரு மணி நேரமாக அலைக்களித்தனர். இந்த காரணத்தால் அதிகாரிகள் வந்த சோதனை ரயிலை இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சிறைபிடித்தனர்.
பின்னர் ரயில்வே அதிகாரி நடத்திய பேச்சுவார்த்தையில் 30 நாட்களுக்குள் பணிகளை முடித்து தருவதாக உறுதி கூறியதன் மூலம் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிகழ்வில் குருந்தன்கோடு வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஶ்ரீவேணு முன்னிலை வகித்தார். உடன் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் மதியழகன், திங்கள்நகர் பேரூராட்சி தலைவர் சுமன், ரீத்தாபுரம் பேரூராட்ச்சி துணை தலைவர் விஜீமோன், திங்கள்நகர் பேரூராட்சி வார்டு உறுப்பினர் ஜேக்கப், தக்கலை வட்டார தலைவர் திஜீ, வின்சென்ட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



