பூதப்பாண்டி, ஆகஸ்ட் 29 –
கடந்த சில தினங்களுக்கு முன்பு பூதப்பாண்டியில் நடந்த ஒரு விழாவில் பேசிய பேச்சாளர் அவர் வந்த விழாவிற்கு வேண்டியதை பேசாமல் இந்துக்களின் கடவுளாகிய சிவபெருமானையும், சுடலைமாடசாமியையும் தகாத வார்த்தைகளால் பேசி இந்து மத கடவுளை இழிவுபடுத்தியதுடன் இந்துக்களின் மனதையும் புண்படுத்தி பேசியுள்ளார்.
இதை கண்டித்து கேட்ட ஒரு இந்து நபரை அடித்து உதைத்து அவமானப்படுத்தியுள்ளனர். இது குறித்து பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இந்து கடவுளை இழிவுபடுத்தி பேசிய நபர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்று இந்து முன்னனி சார்பில் பூதப்பாண்டி வடக்கு தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்க்கு இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். தோவாளை ஒன்றிய தலைவர் ஸ்ரீ நாராயணராஜ் முன்னிலை வகித்தார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் ரஜினிகாந்த், வக்கீல் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சுரேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.



