சென்னை, பிப். 19 –
உலகின் மிகப்பெரிய கணக்கியல் தொழில்முறை அமைப்பான இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் 26வது கவுன்சில், 2026-27 ஆண்டிற்கான புதிய தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்தல் மூலம் தேர்வு செய்துள்ளது.
இதன்படி, சி.ஏ. பிரசன்ன குமார். டி அவர்கள் ஐசிஏஐ -யின் தலைவராகவும், சி.ஏ. மங்கேஷ் பாண்டுரங்க் கினாரே துணைத் தலைவராகவும் 2026 பிப்ரவரி 12ஆம் தேதி பொறுப்பேற்றுள்ளனர்.
புதிய தலைமைத்துவம், நிறுவனத்தின் தொழில்முறை மேம்பாடு, தரநிலைகள் வலுப்படுத்தல் மற்றும் மற்றும் உலகளாவிய அளவில் இந்திய கணக்காய்வு துறையின் மரியாதையை உயர்த்தும் நோக்கில் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



