சுசீந்திரம், செப். 6 –
சுசீந்திரத்தில் இருந்து தேரூர் வழியாக வெள்ள மடம் நோக்கி சென்ற நெல் அறுவடை இயந்திரம் ஏற்றி வந்த வாகனம் தேரூர் வண்டிமலட்சி அம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த பொழுது சாலை அருகே இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் மின் கம்பம் இரண்டு துண்டாக முறிந்து அறுவடை இயந்திரத்திற்கு மேல் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் உயிர் தப்பினார். அது மட்டுமின்றி சாலை நடுவே வண்டி நின்றதால் ஆங்காங்கே செல்கின்ற வாகனங்களும் செல்ல முடியாமல் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
அதிர்ஷ்டவசமாக அருகே இருந்த வீடுகளில் உள்ள மின் ஒயர்களும் அருந்து விழுந்து யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. தகவல் அறிந்ததும் மின் வாரிய துணை பொறியாளர் பெருமாள் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வையிட்டார். பின்பு மின் ஒயர்களையும் முறிந்து கிடந்த மின் கம்பத்தையும் மாற்றி போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றார். மின்கம்பம் உடைந்ததால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.



