சென்னை, செப்டம்பர் 15 –
சென்னை, வானகரம் சிவபூதம் என்னும் இடத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மதுரவாயல் தொகுதி சட்டமன்றத் உறுப்பினர் காரப்பாக்கம் கா. கணபதி எம் எல் ஏ, ஹேமலதா கணபதி கலந்து கொண்டு சிறப்பித்தார். அருள்மிகு ஓளஷாதாம்பிகை உடனுறை ஸ்ரீஅக்னீஸ்வரர் அறக்கட்டளை சிவ ஸ்ரீ நடராஜன் தலைவர், எம. கேசவன் செயலாளர், எஸ். தணிகாசலம் பொருளாளர், ஜி. பினாக பானி துணைத் தலைவர், வி. திருநாவுக்கரசு துணைச் செயலாளர், வி. சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு வருகை தந்த அனைத்து பொது மக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.



