நல்லூர், நவம்பர் 28 –
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சூரங்குடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளி வளாகத்தில் சாலையோரம் உள்ள சுற்றுச் சுவர் அருகே மிகப் பழமை வாய்ந்த மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் கிளைகளுக்கு இடையே மின் கம்பிகள் ஆபத்தான முறையில் செல்கின்றன,தற்போது குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த மரமானது பள்ளிக்கூடம் இயங்கும் நாட்களிலோ அல்லது பிற நாட்களிலோ முறிந்து விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது.
எனவே பெரும் விபத்து ஏற்படும் முன்பு மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தும் படி பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


