திருவண்ணாமலை, செப். 23 –
திருவண்ணாமலை டேனிஷ்மிஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழுகூட்டம் தி.மலை மாவட்ட தலைவர் எச். முத்துகுமாரச்சாமி தலைமையில் நடந்தது. மாவட்ட துணை தலைவர்கள் எஸ். ஏழுமலை பாஸ்கர், ஏ. சீனுவாசன், எஸ். காமராஜ், மாவட்ட துணை செயலாளர் கே. ஏழுமலை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ. சங்கர் ஆகியோர் முன்னிலை வகிக்க தி.மலை மாவட்ட செயலாளர் ஏ. கணேஷ்பாபு அனைவரையும் வரவேற்றார். இந்த கூட்டத்தில் மாநில செயல்தலைவர் கு. ராமசாமி, மாநில பொதுச் செயலாளர் க. பன்னீர்செல்வம், மாநில துணை தலைவர் க. பிரகாசம், மாநில துணை பொருளாளர் செ. குமார், மாநில துணை செயலாளர் தி. குமரகுரு, மாவட்ட கௌரவ தலைவர் ஏ. முனியன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாநில தலைவர் இரா. ஜெயதேவன் சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் பட்டம் முடித்து 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை பணிபுரிந்து கொண்டிருக்கும் பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஊதியம் வழங்க வேண்டும். உடற்கல்வி ஆசிரியர்கள் உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை பெற்றவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை தணிக்கைத்துறை தடை ஏற்படுத்துவதை ரத்துசெய்ய வேண்டும். உடற்கல்வி பாடத்திற்கு பாடபுத்தகம் பிடிஎப் வடிவில் வெளியிடப்பட்டதற்கு வரவேற்கிறோம். அதற்கு தமிழக அரசுக்கு நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்வது மேலும் மாணவர்களுக்கு பாடபுத்தகத்தை அச்சிட்டு பாடகுறிப்பேடும் அத்துடன் சேர்த்து உடனடியாக வழங்கிட வேண்டும். 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை உள்ள அரசு பள்ளிகள் அரசு உதவிபெறும் பள்ளிகள் மாநகராட்சி பள்ளிகள் மற்றும் அனைத்துவகை பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்களை பணிநியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தமிழகம் முழுவதிலுமிருந்து 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.



