திருப்பூர், ஜூன் 8 –
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயல் வீரர்கள் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் ஓம் சக்தி கோயில் சாலையில் உள்ள தனியார் திருமண மஹாலில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் இறை ஆர் வெங்கடேஷ் தலைமையிலும் மாநில சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் ஜான் மகேஸ்பிரன்ஸ்சுவா முன்னிலையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கழக துணை பொதுச் செயலாளர் உடுமலை சண்முகவேலு கலந்து கொண்டு புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்து சிறப்புறாற்றினார்.
இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரோகிணி கிருஷ்ணகுமார், ஈரோடு மாவட்ட செயலாளர்கள் மதிவாணன், திருநாவுக்கரசு, வெங்கடேஷ், கோவை மாவட்ட செயலாளர்கள் பாஸ்கர், சதிஷ், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் குமார், மாவட்ட அவைத் தலைவர் புல்லட் ரவி, மாவட்டத் துணைச் செயலாளர் சுரேஷ் ராஜா, மாவட்ட இணைச்செயலாளர் கீதா, பொதுக்குழு உறுப்பினர் நாகேந்திரகுமார், மாவட்ட பொருளாளர் குமரவேல், அம்மா பேரவை செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் தரணி சுரேந்தர், தொழிற்சங்க பேரவை செயலாளர் சதீஷ், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சுதாகர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலாவதி, இணைச்செயலாளர் அனிதா, துணை செயலாளர் மெர்லீன், வர்த்தக அணி செயலாளர் பிரசாந்த் கிருஷ்ணா மற்றும் மாநில மாவட்ட பகுதி வட்டக் கழக ஒன்றிய கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.



